பா. சக்திவேல்

Name

Email *

Message *

Saturday 9 January 2016

பல்லுயிர் தன்மை

Image result for jallikattu
ஜல்லிக்கட்டு  நடத்த அனுமதி அளித்து  சமீபத்தில் வெளியான செய்தி ஒரு சாரார்க்கு மகிழ்ச்சியாகவும் விலங்கின  ஆர்வலர்களுக்கு புருவத்தை உயர்த்துவதாகவும் உள்ளது. இது பண்டைய கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக மார் தட்டிக் கொள்ளும் நாம் , வீரத்தின் வெளிப்பாடாக விளம்புகிறோம் . ஐரோப்பிய நாடுகளிலும் இது போல் காளை உடன் மோதும் விளையாட்டு உள்ளது . அதில் ஒரு வீரர் மட்டுமே ஒரு சமயத்தில் மோதுகிறார் . துரதிர்ஷ்டமாக இறுதியில் அந்த காளை கொன்று வீழ்த்தப்  படுகிறது . இதற்கு நேர்மாறாக தமிழகத்தில் நடை பெரும் போட்டிகளில்  காளைகளுக்கு வெறி ஏற்றி வெளியேற்றப்பட்டபின் கூட்டமான இளைஞர்கள் அதை  நோக்கி  மிரட்டும்  வண்ணம் ஓடுகின்றார்கள் . எவர் ஒருவர்  அதன் திமிலை பிடித்து தொங்கி கொண்டு ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு செல்கிறார்களோ  அவரே வென்றார்  என அறிவிக்கப்படுகிறது . இதில் தனிப்பட்ட நபரின் வீரம் வெளிப்படுத்த மேற்கொண்ட முயற்சியின் போது வேடிக்கை பார்க்கும் அப்பாவி மக்களே  பலர் மிதியுண்டும் கொம்பால் குத்தப் பட்டும் பரிதாப நிலைக்கு  செல்கின்றார்கள் . என்னுடைய  வேண்டுகோள் இது தான் : போட்டியில் ஈடுபட விரும்புவோர்கள் ஒருவர் பின் ஒருவராக பாது காப்பு வளையத்துக்குள் வந்து தனியாக காளையை , திரைப்படத்தில் எதிர் கொள்வது போல எதிர்க்க  வேண்டும் . அப்போதுதான்  தனிப்பட்டஆண்மகனின் வீரம் ஆராதிக்கப்படும் .


மேலும் விலங்கு நல ஆர்வலர்களுக்கு ஒரு விண்ணப்பம் . காளைகள் , எருதுகள் என்ற பெயரில் காலம் காலமாக உழவனின் தேவைகளுக்கும் , போக்குவரத்திற்கும் பயன் படுத்தப்  பட்டு வந்துள்ளது. ஆனால்  காடுகளில் கம்பீரமாக திரிந்து வனத்தை வளப் படுத்தி வந்த யானைகளை பிடித்து வந்து ஆலயங்களின் முன் நிற்க வைத்து ஐந்துக்கும் பத்துக்கும் காணிக்கை  என்ற பெயரில் பிச்சை எடுக்க வைத்து , இப்போது  நிலத்தில் வாழும் உயிரிலே மிக பெரிய தோற்றத்தை உடைய களிறுகளை காலில்  சங்கலி போட்டு கட்டி வைத்து கால் கடுக்க நிற்க வைத்து விட்டு , ஆண்டிற்கு ஒரு முறை அவைகளை கொண்டு யாகங்கள் நடத்தி புத்துணர்ச்சி முகாம் என்ற பெயரில் ஒரு சிகிச்சை அளிப்பது  நியாயமா ? அவைகளை சுதந்திரமாக காட்டில் நடமாட வைக்க வழி காணுங்கள் . காடுகளின் ஆக்கிரமிப்பில் இறங்கியுள்ள அந்நியாயகாரர்களின் அத்து மீறல்களிலிருந்து  அவைகளுக்கு நல வாழ்வு தாருங்கள் . பல்லுயிர்  தன்மை குறித்து உலகத்திலேயே முதன் முதலில் பேசியவர் வள்ளுவர் தான் . அதிலும்  அவர்  பல  நூல்களை  கற்று ஆய்வு செய்ததில் முதன்மையானதாக சொல்கிறார் .
"பகுத்துண்டு  பல்லுயிர்  ஓம்புதல்  நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "

No comments:

Post a Comment