பா. சக்திவேல்

Name

Email *

Message *

Tuesday 19 January 2016

பொங்கல் விழா

இந்த ஆண்டு திருவள்ளுவர்  தினத்தன்று நல்லதொரு நிகழ்வில் கலந்து   கொள்ளும் வாய்ப்பு   கிடைத்தது .கி பி 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த மேடையில் உரை  ஆற்றினேன் .  அதன் பிறகு என் கல்லூரி  காலங்கள் வரை (கி பி 2005 ) பல்வேறு  இலக்கிய நிகழ்சிகளில் முத்தமிழ் பேரவையில் கலந்து கொண்டிருக்கிறேன் .
10  ஆண்டுகள் கழித்து நண்பர் கவிஞர் கிருஷ்ண குமாரிடமிருந்து அழைப்பு .
வள்ளுவன் - பாரதி -கலாம்  இவர்களின் கனவுகள் இந்தியாவில் ஊற்று நீராய் நிறைகிறதா ? கானல் நீராய் மறைகிறதா ? என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு பூண்டி கல்லூரியின் முன்னால் முதல்வர் முனைவர்       உரு .ராஜேந்திரன் நடுவராக பொறுப்பேற்று செவ்வனே செய்தார் .
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் செக .மகேசன் அவர்கள் என்னுடைய நேர்மறை அணிக்கு தலைமை ஏற்று  வாதிட்டார் . அடியேனுக்கு வழங்கப்பட்ட 25 மணி துளிகளில் சொந்த ஊர் மக்களின் முன்  தெம்போடு ,சொந்த மண்ணில் விளையாடும் கிரிக்கெட் வீரரை போல துணிந்து ஆடினேன் . அதற்கு முன்னர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா . மகாலிங்கம் அவர்களின் தமிழ் பற்று என்ற தலைப்பில் ,புலவர் ,குடவாசல் திரு. ராமமுர்த்தி அவர்கள் சொற் பொழிவு ஆற்றினார் .

No comments:

Post a Comment