பா. சக்திவேல்

Name

Email *

Message *

Thursday 19 January 2017

உண்மை ஊழியன்


பேராசிரியர் செல்வகணபதி ஐயா ஒரு கூட்டத்தில் கூறிய செய்தி ..
முன்னொரு காலத்தில் ஒரு ஏழை விவசாயி ( விவசாயி என்றாலே ஏழையாக இருப்பான் போலிருக்கிறது) தன்னுடைய  மனைவியின் உதவியோடு ஏர் கொண்டு உடலை  வருத்தி நிலத்தை உழவு செய்து கொண்டிருந்தார் . அப்போது கரை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளில் இரண்டு சேவை மனதோடு நான் உங்களுக்கு உதவலாமா  என்று கேட்டது ..
அதற்கு அந்த விவசாயி உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை. ஆதலால் வேண்டாம் என்று மறுத்தார் . அந்த மாடுகள் விடுவதாயில்லை , எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று கூறி நிலத்தை உழுவதற்கு உற்ற துணைவனாய் உதவியது . உழுதவன் விதைத்தான் , பயிர் வேகமாக வளர்ந்து விளைந்து செழித்தது .

அறுவடை நேரம் நெருங்கியது , கதிர் கட்டுகள் களத்திற்கு வந்து சேர்ந்தன . இப்போது நான் உதவலாமா என்றது மாடுகள் . என்னிடம்  கொடுக்க ஒன்றுமில்லை என்றான்  விவசாயி . பரவாயில்லை  எனக்கு எதுவும் வேண்டாம்  என்று சொல்லி தானியங்களை  பிரித்தெடுக்க போரடிக்க  உதவியது .
குவிந்த நெல்மணிகளை  வண்டியில் போட்டு வீட்டிற்கு இழுத்து கொண்டிருந்தான் - இப்போது நான் உதவலாமா என்றது. வழக்கம் போல என்னிடம்  கொடுக்க ஒன்றுமில்லை என்றான்  விவசாயி.  எனக்கு எதுவும் வேண்டாம்  என்று சொல்லி தானிய மூட்டைகளை அவன் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தது .

திரும்பி வந்த காளைகளை கண்டான் விவசாயி மனம் கசிந்தது . காளைகள் திரும்பி பார்த்து கேட்டது . விளைந்த மணிகளை வீட்டில்  சேர்த்து விட்டேன் . அங்கேயே உங்களுக்கு வேண்டாம் என்று விட்டு வந்த வைக்கோலை நான் உணவாக எடுத்து கொள்கிறேன் .
நெல்மணிகளில் இருந்து  அரிசியை நீங்கள் உணவாக எடுத்து கொள்கிறீர்கள். உங்களுக்கு வேண்டாத தவிடை எனக்கு தாருங்கள்  என  கேட்டது . என்னுடைய உணவு நீங்கள் கொடுத்தது , அதனால் என்னுடைய கழிவுகள் உங்களுக்கு தான் சொந்தம் . அதை உங்கள்  வயலுக்கு உரமாக பயன் படுத்தி கொல்லுங்களென்றது .

No comments:

Post a Comment