பா. சக்திவேல்

Name

Email *

Message *

Saturday 24 December 2016

பெற்றவளின் பெருமூச்சு

பெற்றவளின்  பெருமூச்சு 


அன்பும் அரவணைப்பும் காட்டி வளர்த்த அன்னை - வெண்ணை போல உருகுகின்றாள் ...

ஆயிரக்கணக்கான வாய் அமுதூட்டிய நான் அகவை கூட்டிய  போது அருகிலிருக்க ஒரு பிள்ளைக்கும் மனமில்லை ...

வேலை தவறாமல் உணவு சமைத்து உயிரூட்டிய என் பிள்ளைகள்  இன்று அவர்களின் அலுவலக வேலை சுமை என்று சொல்லி என்னை தள்ளி வைக்கின்றனர் . 
கணினிக்கும், சாய்மான இருக்கைக்கும் ஏன் நாய் குட்டிக்கும்  இடமிருக்கும் என் பிள்ளையின் வீட்டில் நான் இருக்க மட்டும் இடமில்லை. ஆமாம் மனதில் இடமிருந்தால் தானே !

இமை மூட மனமின்றி இரவுகளை பகலாக்கி பாலூட்டி முகம் பார்த்த எனக்கு,என் பிள்ளை முகம் காண ஏக்கம் தான் ... தூக்கம் கண்களில் துளியும் இல்லை,என் பிள்ளை பாசத்தின்  தாக்கம் கண்ணீர் துளிகளை இயல்பாக வரவழைத்தது.


மருமகளாய் வந்தவளை கோபிக்க மாட்டேன் .. என் மகனின் முதிர்ச்சியும் பொருளாதார நுட்பமும் எனக்கு அவனது வளர்ச்சி குறித்த மகிழ்ச்சி தந்தாலும் மனதுக்குள் மானுடத்தை பற்றிய அதிர்ச்சி அளித்தது..

அவனுக்கு சாய்ந்தாடும் பொம்மையை கொடுத்து சிறு வயதில் விளையாட சொல்லி இருக்கிறேன் .அதை பரிட்சித்து பார்கிறானோ என்னோவோ .. ஒரு பக்கமாய் .... என்னால் எதற்கு அவர்களுக்குள் ..........?

என்னுள் உருவான பிள்ளை  பெற்றெடுத்த மழலைகளை நான் மடி அமர்த்தி அழகு பார்க்க ஆசையின்  ஓசை மனதுக்குள் அசை போடுகிறது ..இந்த பாவி மனம் ஏனோ அதற்காக  யார் யாரையோ வசை பாடுகிறது ...

தாய்மையின் அர்த்தத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாமல், கண்ணீரும் கவலையும் மட்டும் கனவிலும் தொற்றிக்  கொள்கிறது .....

பெண்ணிற்கு மட்டும் ஏன் இந்த பந்தத்தை  கொடுத்தான் இறைவன் - தீ பந்தத்தை சூழ்ந்திடும் பூச்சிகள் போல பிறவிகள்   எடுத்தாலும் நான் மட்டும் ஏன் திரியாய்  கருகி தீபமாய் எரிகிறேன் ....

அவர் மனதை கல்லாக்கிக் கொண்டார் - தேவைக்கு  மட்டும் தேடி வரும் பிள்ளை என ...என்னால் தான் இயலவில்லை .. என்ன செய்வது ..

ஏதோ பரிணாம வளர்ச்சி என்கிறார்களே ? என் மருமகளையாவது புண்ணியவாதியாக்கட்டும், அவளுக்கும் சிறு பிள்ளைகள் இருக்கிறார்களே ..அவர்கள் வளர்வதுக்குள் ஏதும் மாற்றம் நிகழாதா?



என்  உயிர் எப்படியோ  போய்  விடும் .... இறைவா இதற்காக அவர்களை தண்டித்து விடாதே ....அவன் சிறு குழந்தை , ஏதும் அறியாதவன் ..


2 comments:

  1. மனம் கசிந்து விட்டது நண்பரே

    ReplyDelete
  2. அப்படியா. நீட்டி எழுதவே எண்ணினேன். ஒரு கனம் என் கண்கள் கலங்கியது.அதனால் நிறுத்தினேன். இந்தப் பக்கத்தை வாசித்த நண்பர் ஒருவர் தன் தாயைக் காண அயல் நாட்டிலிருந்து நாடு திரும்புகிறார்.

    ReplyDelete