பா. சக்திவேல்

Name

Email *

Message *

Saturday 31 December 2016

புதுசு கண்ணா..




புத்தாண்டு ஒன்று
புதிதாய்
பூக்க இருக்கிறது,

வருமாண்டு
வரவாய்
வாரி வழங்க வருகிறது,

தினம் மாண்டு வாழும்
ஏழை நாட்கள்
தித்திக்க திமிருகிறது,

நாடாண்டு
நாடகம் போடுவோர்
நடுநிலை போற்றுவர்,

வீடாண்டு
மனிதம் பேணுவோர்
விபரீதயோகம் காணுவர்,

என்றெல்லாம்
சென்ற ஆண்டு
புத்தாண்டு பலனை பொழிந்தார்
பிரபல நிகழ் கணிப்பாளர் ..

ஆண்டுகள் ஐயாயிராம் ஆனாலும்
அதுவாய் மாறுவது எதுவமன்று .

ஆண்டவன் மாற்றியதை விட
ஆண்டவன் செய்ததே அதிகம் ..

ஆள்பவனை தேர்வு செய்யும்
அடித்தள மக்களே !

இந்த ஆண்டாவது
யோக்கிய  தலைமைகள்
உலக நிலப்பரப்புகளை ஆளட்டும் ..

அதை தேர்வு செய்யும் நல்லறிவை
மக்களுக்கு நல்கட்டும் ..

பொறுமை காத்து, காலத்தின்
கணிப்பில் புரண்டது  போதும் !

பொங்கி வரும் அலைகளே
எதிர்த்த பாறை மோதும்!

துணிந்து  நிற்க முனைந்த பின்
தூக்கம் எதற்கு மனதினில் ..

பணிந்து பார்க்கும் பணியிலும்
அணிந்து செல்வோம் வீரத்தை ..

உழைப்பு  உண்டு உடலினுள்
உறுதி நின்ற நெஞ்சத்துள்
களைப்பு ஏது கண்களில்
கருதி நீரும் பார்த்தீரேல் ..

ஆண்டு சுழற்சி  ஒரு கணக்கு!
அதுவும் நமக்கு நாமாய் சமைத்தது ..

பிரபஞ்ச இயக்க நெறியில் - இந்த
பிஞ்சு அறிவு எதைக்  கண்டது ?
என்ன கணித்தது ?

பால்வெளி  வீதியில்
பல்லாயிரம் பகலவன்கள் ..
நம் பூமி அதில் ஒரு தூசு ..




No comments:

Post a Comment