பா. சக்திவேல்

Name

Email *

Message *

Saturday 31 December 2016

புதுசு கண்ணா..




புத்தாண்டு ஒன்று
புதிதாய்
பூக்க இருக்கிறது,

வருமாண்டு
வரவாய்
வாரி வழங்க வருகிறது,

தினம் மாண்டு வாழும்
ஏழை நாட்கள்
தித்திக்க திமிருகிறது,

நாடாண்டு
நாடகம் போடுவோர்
நடுநிலை போற்றுவர்,

வீடாண்டு
மனிதம் பேணுவோர்
விபரீதயோகம் காணுவர்,

என்றெல்லாம்
சென்ற ஆண்டு
புத்தாண்டு பலனை பொழிந்தார்
பிரபல நிகழ் கணிப்பாளர் ..

ஆண்டுகள் ஐயாயிராம் ஆனாலும்
அதுவாய் மாறுவது எதுவமன்று .

ஆண்டவன் மாற்றியதை விட
ஆண்டவன் செய்ததே அதிகம் ..

ஆள்பவனை தேர்வு செய்யும்
அடித்தள மக்களே !

இந்த ஆண்டாவது
யோக்கிய  தலைமைகள்
உலக நிலப்பரப்புகளை ஆளட்டும் ..

அதை தேர்வு செய்யும் நல்லறிவை
மக்களுக்கு நல்கட்டும் ..

பொறுமை காத்து, காலத்தின்
கணிப்பில் புரண்டது  போதும் !

பொங்கி வரும் அலைகளே
எதிர்த்த பாறை மோதும்!

துணிந்து  நிற்க முனைந்த பின்
தூக்கம் எதற்கு மனதினில் ..

பணிந்து பார்க்கும் பணியிலும்
அணிந்து செல்வோம் வீரத்தை ..

உழைப்பு  உண்டு உடலினுள்
உறுதி நின்ற நெஞ்சத்துள்
களைப்பு ஏது கண்களில்
கருதி நீரும் பார்த்தீரேல் ..

ஆண்டு சுழற்சி  ஒரு கணக்கு!
அதுவும் நமக்கு நாமாய் சமைத்தது ..

பிரபஞ்ச இயக்க நெறியில் - இந்த
பிஞ்சு அறிவு எதைக்  கண்டது ?
என்ன கணித்தது ?

பால்வெளி  வீதியில்
பல்லாயிரம் பகலவன்கள் ..
நம் பூமி அதில் ஒரு தூசு ..




Wednesday 28 December 2016

அச்சுறுத்தலும் மிச்சமிருத்தலும்

இயற்கை மாபெரும் உணவுச்  சங்கிலியை உருவாக்கி  ஒவ்வொரு உயிருக்கும் உணவாக்கி வைத்திருப்பது அற்புதத்திலும் அதி அற்புதம் . இதில் ஒரு   லட்சத்து  எழுபத்து மூன்றாயிரம் யோனி  பேதங்களுடன் பல கோடி உயிர்கள் பல்வேறு சிறப்புத் தனித்தன்மைகளுடன் வாழ்ந்து வருகின்றன.  இவற்றில் ஒரு உயிரியாக மனிதனும் உருவாகியிருக்கிறான் . 


நாளடைவில் மனிதன் மட்டும் சில தந்திர யுக்திகளாலும் நீண்ட அனுபவங்களின் நினைவு திறன் மேம்பாட்டினாலும் அதிக அளவில் மற்ற உயிர்களின்  சுதந்திரத்திலும் நிம்மதியிலும் கை  வைக்க  ஆரம்பித்தான் . உணவுக்காக பறவை , விலங்கு  வேட்டையை  துவங்கியவன்  நிலையான உணவனுக்காக விவசாயம் செய்கிறேன் என்று சொல்லி காடுகளை அளித்து உணவுச்சங்கிலியில்   அடித்தட்டு  உற்பத்தியாளர்களாக இருந்த  மரம்  செடிகளை ஒடுக்கி  காடுகளை  சுருக்கி  விலை நிலத்தை பெருக்க முனைந்தான். வணிக  நடவடிக்கையாலும் தன்  அடாவடித்தனத்தை மற்ற  உயிர்களின் மீது  அவிழ்த்து  விட்டான் . 
இதை பார்த்து தான் வள்ளுவர் 

" பகுத்துண்டு  பல்லுயிர் ஓம்புதல்  நூலோர் 
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "
என்று  தாம்  இதுவரை ஆய்ந்த  பல்லாயிரம்  நூல்களில்  இதுவே  முதன்மையானதாக சொல்லப்பட்டுள்ளது)  என  உலகிலேயே " பல்லுயிர் தன்மை " (Biodiversity ) குறித்து  முதன் முதலில் பேசினார்.
அடுத்ததாக  நமக்கு முந்தைய தலைமுறையில்  வந்த  பாரதி  " காக்கை குருவி எங்கள் சாதி" என்று  வழி மொழிந்தான் . ஆனால்  இன்று மனிதனின் அதீத ஆசையினாலும்  கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்பினாலும்  இமாலய மலை சாரலிலும்  மேற்கு  தொடர்ச்சி மலையினிலும் பல அபூர்வ வகை உயிரினங்கள் ( உலகில் வேறெங்கிலும் இல்லாத) அழிந்து வருவதாக உலகில் அழிந்து வரும் உரினங்களின் பதிவு ஏட்டில்  (red data book) குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதனின் அத்து  மீறலால் வாழ வழியின்றி  மீண்டும்  அதனுடைய  பூர்வீக இருப்பிடத்தை தேடி  விலங்குகள்  வருவதால்  மனித-விலங்கு  மோதல்கள்  அங்கங்கே  அதிகமாகி விட்டது . இதற்கு காரணம் மனிதனின்  அசுர  வளர்ச்சியும்  சகிப்புத்தன்மை குறைபாடும்  வியாபார குறுக்கு புத்தியும் ஆகும் . இவற்றிலிருந்து  ஏனைய உயிர்கள் தப்பித்து  எத்தனை  காலம்  வாழப் போகின்றதோ ? அவைகளுக்கும்  கொஞ்சம் இடம்  கொடுப்போம் .  
                                   







Tuesday 27 December 2016

பாரதத்தின் சாதனையாளர்கள் ( Achievers of India)

பாரதத்தின்  சாதனையாளர்கள் 
பள்ளிப்படிப்பை  பாதியில்  நிறுத்தி  சாதித்து  காட்டியவர்களைத்தான்  இன்று பெரும்பாலான  தன்னம்பிக்கை  பயிற்சி  அளிப்பவர்கள்  முன்னுதாரணமாக காட்டுகின்றனர் . ஆனால்  முறையான  தொழில் நுட்பமோ , அறிவியலோ  அல்லது  கலையோ  பயின்று  சாதித்து தனது  துறையில் தனி த் தடம் பதித்தவர்கள்  பல்லாயிரக்கணக்கானோர் . இவர்களை  எடுத்து காட்டினால்  தான் இளைய தலைமுறைக்கு  நேர்மறை  எண்ணம்  உருவாகும்.

Monday 26 December 2016

மாரடைப்பு மார்க்கம்



மாரடைப்பு மார்க்கம்

மாரடைப்பு  மந்திரம் பல குற்றவாளிகளின் தந்திரங்களில் முக்கிய ஒன்றாக 
பல திரை இலக்கியங்களில் சாட்சியாக காட்டப்பட்டுள்ளது ...

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முயற்சிக்கவில்லை ..

ஆனால் சமீபத்திய தமிழக நிகழ்வுகள் மக்களை கால ஓட்ட கணக்காளர்களாக 
மாற்றிச் செல்கிறது ..

நினைத்த நேரத்தில் அவசர ஊர்தியையும் , மருத்துவரையும் வரவழைப்பது சாத்தியம் எனில் மாரடைப்பை உடலுக்குள் கொண்டு வருவதும் எளிது தானோ ?
எனக்கு தெரியவில்லை அறிந்தவர்கள் சொல்லுங்கள் . 



"திருடனுக்கு  தேள் கொட்டியது  போல " என  சொலவடை உள்ளது . 
தேள்  உருவில்  வந்தது யார் ? நீதி தேவனா ?

நீதி தேவன் வேற்று  உருவில் வருவதாயின் இப்போது உள்ள நவீன திருடர்களுக்கு  சாதரண நச்சு கொண்ட தேளின்  கொடுமை போதுமானதுதானா ?

சுனாமிகள்  இந்த நாட்டின் வளத்தை சுரண்டி  சென்றதை விட  பினாமிகள் எல்லோரையும் வறண்டி  சேர்த்ததுதானே  அதிகமாக தெரிகிறது ...

உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு வியர்வை சிந்துபவர்கள் எல்லோரும் ஏமாளிகளா ? ஏதும்  அறிந்திராத  கோமாளிகளா ? அல்லது வாழ்க்கையை  வாழத் தெரியாத  சாமர்த்தியமற்றவர்களா ?

கொடுங்கோலர்கள்  மக்களை வதைத்ததை  விட, இந்த  நீண்ட கையர்கள் மக்களிடம் அதிகம் கறக்கின்றனரே !

இதையெல்லாம்  இந்த  நாடும் , மக்களும்  எப்படி  சகிக்க  போகிறார்கள் ...

வெண்மையை  கண்டிறாதவர்கள்  பழுப்பையும் வெண்மையென்று  புகழ்வார்களே !

என்னாட்டு இளைஞர்கள்  ஒன்று தனக்கு  பிடித்த  நாயகர்  இவர்  தான்  என சண்டையிடுகின்றனர் , இல்லை பொழுதை வீணே  கழிக்க  நினைக்கின்றனர் .

இந்த மாரடைப்பு மந்திரவாதிகளுக்கு உண்மையில்  மரண அடைப்பு கொடுக்கப்போவது எப்போது ?

குஜராத்திலும் வட  நாட்டிலும் இது  போல நடவடிக்கைகள்   தொடர்ந்தால் தானே  தென்நாட்டு  மக்கள்  இன்னும்  நிறைய மருத்துவ சிகிச்சை  நாடகங்களை காண முடியும் ... ஆமாம் பல  இல்லங்களில்  சுவாரசியம் இல்லாத நாடகத் தொடர்களை  பார்க்கும் பலர், இனி  சமீபத்திய  செய்திகளை காணத் தொடங்குவர் ...










Saturday 24 December 2016

பெற்றவளின் பெருமூச்சு

பெற்றவளின்  பெருமூச்சு 


அன்பும் அரவணைப்பும் காட்டி வளர்த்த அன்னை - வெண்ணை போல உருகுகின்றாள் ...

ஆயிரக்கணக்கான வாய் அமுதூட்டிய நான் அகவை கூட்டிய  போது அருகிலிருக்க ஒரு பிள்ளைக்கும் மனமில்லை ...

வேலை தவறாமல் உணவு சமைத்து உயிரூட்டிய என் பிள்ளைகள்  இன்று அவர்களின் அலுவலக வேலை சுமை என்று சொல்லி என்னை தள்ளி வைக்கின்றனர் . 
கணினிக்கும், சாய்மான இருக்கைக்கும் ஏன் நாய் குட்டிக்கும்  இடமிருக்கும் என் பிள்ளையின் வீட்டில் நான் இருக்க மட்டும் இடமில்லை. ஆமாம் மனதில் இடமிருந்தால் தானே !

இமை மூட மனமின்றி இரவுகளை பகலாக்கி பாலூட்டி முகம் பார்த்த எனக்கு,என் பிள்ளை முகம் காண ஏக்கம் தான் ... தூக்கம் கண்களில் துளியும் இல்லை,என் பிள்ளை பாசத்தின்  தாக்கம் கண்ணீர் துளிகளை இயல்பாக வரவழைத்தது.


மருமகளாய் வந்தவளை கோபிக்க மாட்டேன் .. என் மகனின் முதிர்ச்சியும் பொருளாதார நுட்பமும் எனக்கு அவனது வளர்ச்சி குறித்த மகிழ்ச்சி தந்தாலும் மனதுக்குள் மானுடத்தை பற்றிய அதிர்ச்சி அளித்தது..

அவனுக்கு சாய்ந்தாடும் பொம்மையை கொடுத்து சிறு வயதில் விளையாட சொல்லி இருக்கிறேன் .அதை பரிட்சித்து பார்கிறானோ என்னோவோ .. ஒரு பக்கமாய் .... என்னால் எதற்கு அவர்களுக்குள் ..........?

என்னுள் உருவான பிள்ளை  பெற்றெடுத்த மழலைகளை நான் மடி அமர்த்தி அழகு பார்க்க ஆசையின்  ஓசை மனதுக்குள் அசை போடுகிறது ..இந்த பாவி மனம் ஏனோ அதற்காக  யார் யாரையோ வசை பாடுகிறது ...

தாய்மையின் அர்த்தத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாமல், கண்ணீரும் கவலையும் மட்டும் கனவிலும் தொற்றிக்  கொள்கிறது .....

பெண்ணிற்கு மட்டும் ஏன் இந்த பந்தத்தை  கொடுத்தான் இறைவன் - தீ பந்தத்தை சூழ்ந்திடும் பூச்சிகள் போல பிறவிகள்   எடுத்தாலும் நான் மட்டும் ஏன் திரியாய்  கருகி தீபமாய் எரிகிறேன் ....

அவர் மனதை கல்லாக்கிக் கொண்டார் - தேவைக்கு  மட்டும் தேடி வரும் பிள்ளை என ...என்னால் தான் இயலவில்லை .. என்ன செய்வது ..

ஏதோ பரிணாம வளர்ச்சி என்கிறார்களே ? என் மருமகளையாவது புண்ணியவாதியாக்கட்டும், அவளுக்கும் சிறு பிள்ளைகள் இருக்கிறார்களே ..அவர்கள் வளர்வதுக்குள் ஏதும் மாற்றம் நிகழாதா?



என்  உயிர் எப்படியோ  போய்  விடும் .... இறைவா இதற்காக அவர்களை தண்டித்து விடாதே ....அவன் சிறு குழந்தை , ஏதும் அறியாதவன் ..


Friday 23 December 2016

கணினித் தமிழ்ச் சங்க ஆண்டுவிழா


கணினித் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்ற அடியேனுக்கும் வாய்ப்பு வழங்கிய ஐயா முத்து நிலவன் உள்ளிட்ட அனைத்து தமிழ் அறிஞர்களுக்கும் நன்றி . 

Thursday 22 December 2016

தீப ஒளி

                                                                  தீப ஒளி

மேலும் தொடர கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும் ...
https://drive.google.com/file/d/0B0VECZKYc_LhblQyczJkY1dLWFk/view?usp=sharing

பாரதி என்னும் அதிர்வலை


பாரதி  என்னும் அதிர்வலை  - தொடர்ந்து படிக்க கீழே சொடுக்கவும் .....

https://drive.google.com/file/d/0B0VECZKYc_LheHlGWEtmMU9hS0k/view?usp=sharing

வாய்மை இந்தியா







தொடர்ந்து வாசிக்க
கீழே உள்ள தொடர்பை சொடுக்கவும் வாய்மை இந்தியா
https://drive.google.com/file/d/0B0VECZKYc_LhTUdOdnQ3WDliNWM/view?usp=sharing