பா. சக்திவேல்

Name

Email *

Message *

Friday 13 May 2016



என் கல்வி என் உரிமை திட்டத்தின் கீழ் 25% மாணவர் சேர்கைக்கு
அரசாங்கம்  ஆணை பிறப்பித்துள்ளது . ஒவ்வொரு தனியார்  மெட்ரிக் பள்ளிகளும் இதை அமுல் படுத்த வேண்டும் .

பெற்றோர்களின் பார்வைக்காக அரசு ஆணையின் தொடர்பு பக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
G.O. Ms.No. 60 School Education (X2) department dated 1.4.2013
இயந்திர பொறியியல் துறை மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கும் நிகழ்ச்சியாக 11.5.2016 அன்று துறை தலைவர் திரு மோகன் அவர்களின் அழைப்பின் பேரில் "முடிவெடு முடித்துவிடு " என்ற தலைப்பில் உரை ஆற்றும் வாய்ப்பு கிடைத்தது .

இயந்திர  நுட்பம் பயில்வோரின் இதயம் வெறும் இயந்திரமில்லை எனும்படி பேராசிரிய நண்பர்களும் மாணவச் செல்வங்களும் உபசரிப்பாலும் , அன்பாலும் எனது நெஞ்சத்தை நிறைத்தார்கள் .
நன்றி.


Thursday 12 May 2016


சாமானிய மக்களாய் இருந்த போது
யாரும் கண்டு கொள்ள வில்லை .

வாக்காள பெருமக்களாக ஆன போது
வாய் நிறைய அழைக்கிறார்கள் .....
வாயில் நுழைந்து வணங்குகிறார்கள் ..
கரம் குவித்து நிற்கிறார்கள் .....
கரம் பற்றி சிரிக்கிறார்கள் ...

திறம் கெட்ட தீ வெட்டிகள் ..
புறம் காட்டி செல்கிறார்கள் ...

உங்கள் வீட்டு பிள்ளை என்பார்கள் ,
சொன்னதை செய்யும் கிள்ளை என்பார்கள் ,
வெற்றியே எல்லை என்பார்கள் ,
வீணாய் பல தொல்லை செய்வார்கள் .
திசை மாறிய தலைவர்கள் 


கால் கடுக்க வரிசையில் நின்று
கடவுளை காண கட்டண தரிசனம் ,

உற்சவ காலங்களில் இலவசமாய் கிடைக்கும்
வீதி உலா தரிசனம் .

காத்து கிடந்து
மனு கொடுக்க மன்றாடியது
அப்போது !

தானே வெளிவந்து
தப்பாட்டதோடு மக்களை காண்பது
இப்போது !

Wednesday 11 May 2016

மழை காலங்களில் 
தவளைகளின் ஆரவாரம் போல 
தேர்தல் களங்களில் 
வேட்பாளர்களின் வீரா வேசம் .

ஐந்து ஆண்டுகளுக்கு
ஓய்வும் உறக்கமுமாய் இருந்து ,
ஒரு முறை சுறுசுறுப்பாய் இயங்குகின்றனர் .

ஐந்து ஆண்டுகள் போராடி கண்கலங்கி 
ஒரு நாளில் (தேர்தல் நாள்)ஓய்வு எடுத்து விடாதீர் .
வாக்களிப்பர் !
வாய்க்கரிசி (கையூட்டு)வாங்காமல் வாக்களிப்பர் !

விடுதி மாணவர்களுக்கான வழி காட்டி நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு வழங்கப் பட்டது . அடியேன் விடுதிக்கான வரையறையில் தொடங்கி இன்றைய மாணவர்களின் மன அறை வரை புதிரான வயதுக்கு எதிரான கருத்துரைக்காமல் உதிராத மலர் போல கொஞ்சம் உறவாலே பேசி ,அன்பாலே யோசி என்று என் பாணியில் எடுத்துரைத்தேன் . மாணவர்கள் கர ஒலியோடு ஏற்று கொண்டனர் என்று தன்னிறைவோடு ஒன்றரை மணி நேரம் பேசி விட்டு வீடு திரும்பினேன் .நிகழ்ச்சி ஏற்பாடுகளை விடுதி காப்பாளர் ,நண்பர் ராமச்சந்திரன் சிறப்புற செய்திருந்தார் . வாய்ப்பு வழங்கிய கல்லூரி நிர்வாகத்திற்கும் , முதல்வருக்கும் நன்றி .

நாள் 5-5-2016

Thursday 5 May 2016

ரேசன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச மொபைல் போன் - நல்ல யோசனை .
ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு எங்களிடம் சில போன்கள் , பல சிம் கார்டுகள் இருக்கிறது . பேசுவதற்கு ரூபாய் தான் தேவை படுகிறது . எனவே மாதா மாதம் 20 கிலோ இலவச அரிசி மாதிரி 200 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் செய்தால்  ரொம்ப உதவியா  இருக்கும்.