பா. சக்திவேல்

Name

Email *

Message *

Sunday 24 January 2016

ஹைக்கூ

எதைஎதையோ கசக்கி வாய்க்குள் போடுகிறாய்,
என்னையும் ஒரு முறை கசக்கி போடேன் 
ஜீன்ஸ் ........

Tuesday 19 January 2016

பொங்கல் விழா

இந்த ஆண்டு திருவள்ளுவர்  தினத்தன்று நல்லதொரு நிகழ்வில் கலந்து   கொள்ளும் வாய்ப்பு   கிடைத்தது .கி பி 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த மேடையில் உரை  ஆற்றினேன் .  அதன் பிறகு என் கல்லூரி  காலங்கள் வரை (கி பி 2005 ) பல்வேறு  இலக்கிய நிகழ்சிகளில் முத்தமிழ் பேரவையில் கலந்து கொண்டிருக்கிறேன் .
10  ஆண்டுகள் கழித்து நண்பர் கவிஞர் கிருஷ்ண குமாரிடமிருந்து அழைப்பு .
வள்ளுவன் - பாரதி -கலாம்  இவர்களின் கனவுகள் இந்தியாவில் ஊற்று நீராய் நிறைகிறதா ? கானல் நீராய் மறைகிறதா ? என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு பூண்டி கல்லூரியின் முன்னால் முதல்வர் முனைவர்       உரு .ராஜேந்திரன் நடுவராக பொறுப்பேற்று செவ்வனே செய்தார் .
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் செக .மகேசன் அவர்கள் என்னுடைய நேர்மறை அணிக்கு தலைமை ஏற்று  வாதிட்டார் . அடியேனுக்கு வழங்கப்பட்ட 25 மணி துளிகளில் சொந்த ஊர் மக்களின் முன்  தெம்போடு ,சொந்த மண்ணில் விளையாடும் கிரிக்கெட் வீரரை போல துணிந்து ஆடினேன் . அதற்கு முன்னர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா . மகாலிங்கம் அவர்களின் தமிழ் பற்று என்ற தலைப்பில் ,புலவர் ,குடவாசல் திரு. ராமமுர்த்தி அவர்கள் சொற் பொழிவு ஆற்றினார் .

Wednesday 13 January 2016

பொங்கட்டும் ............





அன்பு செழித்து -
நேயம் கொழித்து ,
உண்மைகள்  உறைந்து -
நன்மைகள் நிறைந்து, 
பண்பு படர்ந்து -
நட்பு நிகழ்ந்து ,
உழைப்பை உணர்ந்து -
உணர்வால் நெகிழ்ந்து
உள்ளங்கள் விரிந்து -
இல்லங்கள் சிறந்து ,
கசந்த வாழ்வு -
வசந்த வாழ்வாய் ,
பொங்கிட ,
புது நம்பிக்கை தங்கிட, 
பொன்னான வாழ்த்துகள் !

 

Saturday 9 January 2016

பொங்கல் பரிசு

தமிழக அரசு நம் மக்களின் அடையாளமாக  கொண்டாடப்படும் தை திருநாளின் வருகையை வரவேற்க நூறு ரூபாயும் , அரிசியும், இரண்டு அடி  கரும்பு துண்டுகளையும் வழங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது .



ஆனால் தன்  மானத்தையும் , உழைப்பின் வெகுமதியையும் உணர்த்தும் முகமாக அறியப்படும் பொங்கல் விழாவினை தன் சொந்த உழைப்பால் ஈட்டப்பட்ட ஊதியத்தால் கொண்டாடப்படாமல்  இன்னும்  இலவசம் வாங்கி தான் கொண்டாடப்பட வேண்டிய அளவிற்கு இருக்கின்ற  மக்களின் இயலாமையை , அவர்களின் இந்த நிலைக்கு பின்னணயில் இருக்கும் அரசியல் தந்திரத்தையும் நினைக்கும் போது மிகுந்த வருத்தமாக உள்ளது . நான் எந்த அரசியல் அமைப்பையும் சார்ந்தவன் அல்ல என்பதனால் பொது மக்களில் ஒருவனாகவே  இதை காண்கிறேன் .
உண்மையில் பொங்கல் பரிசாக மக்கள் எவ்வளவோ எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள் .
1. இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பை வெறும் அறிவிப்பாக இல்லாமல் நிஜமான  பலன் கிடைக்கும் தொழில் ஆதாரமாக ,
2. நசித்து வரும் சிறு தொழில்களை காக்க , நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை  உலக தரத்திற்கு  கொண்டு செல்லும் தொழில் நுட்ப உதவியாக ,
3.வெறிச்சோடி கிடக்கும் விவசாயத்திற்கு  தன்னம்பிக்கை அளிக்க , உற்பத்தியாகும் பொருள்களை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய , நீராதாரங்களை காக்க ,
4. பல லட்ச கல்வி கட்டணங்களை வசூலித்து கல்வி கண் திறக்கும் கல்வி வள்ளல்களிடமிருந்து மாணவர்களையும் , பெற்றோர்களையும் காத்து அரசின் நேரடி உதவி - உதவி தொகையாக இல்லாமல் , தரமான கல்வி நிலையங்களாக நிலை பெற ,
5. ஒரு  நாளைக்கு சராசரியாக 200 ரூபாய்க்கு குடிக்கும் தமிழக மக்களை காத்து அவர்களின் குடும்ப பொருளாதாரத்தை பேணி , கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு சேமமுரச் செய்ய ,
6. லட்ச  கணக்கில் மருத்துவ கட்டணம் வசூல் செய்யும் வசூல் ராஜா மருத்துவ மையங்களில் இருந்து மக்களை மீட்டு , தரமான மருத்துவ சிகிச்சை நவீன மருத்துவ உபகரணங்களுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்க செய்ய ,
இன்னும் எத்தனையோ நல திட்டங்களை  எதிர் பார்த்து மக்கள் காத்திருகின்றனர் . இவைகளில் எவையெல்லாம் நடை பெறுகிறதோ  அன்று  உண்மையில் பொங்கல் கன்னல் சாராய் இனிக்கும் .

பல்லுயிர் தன்மை

Image result for jallikattu
ஜல்லிக்கட்டு  நடத்த அனுமதி அளித்து  சமீபத்தில் வெளியான செய்தி ஒரு சாரார்க்கு மகிழ்ச்சியாகவும் விலங்கின  ஆர்வலர்களுக்கு புருவத்தை உயர்த்துவதாகவும் உள்ளது. இது பண்டைய கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக மார் தட்டிக் கொள்ளும் நாம் , வீரத்தின் வெளிப்பாடாக விளம்புகிறோம் . ஐரோப்பிய நாடுகளிலும் இது போல் காளை உடன் மோதும் விளையாட்டு உள்ளது . அதில் ஒரு வீரர் மட்டுமே ஒரு சமயத்தில் மோதுகிறார் . துரதிர்ஷ்டமாக இறுதியில் அந்த காளை கொன்று வீழ்த்தப்  படுகிறது . இதற்கு நேர்மாறாக தமிழகத்தில் நடை பெரும் போட்டிகளில்  காளைகளுக்கு வெறி ஏற்றி வெளியேற்றப்பட்டபின் கூட்டமான இளைஞர்கள் அதை  நோக்கி  மிரட்டும்  வண்ணம் ஓடுகின்றார்கள் . எவர் ஒருவர்  அதன் திமிலை பிடித்து தொங்கி கொண்டு ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு செல்கிறார்களோ  அவரே வென்றார்  என அறிவிக்கப்படுகிறது . இதில் தனிப்பட்ட நபரின் வீரம் வெளிப்படுத்த மேற்கொண்ட முயற்சியின் போது வேடிக்கை பார்க்கும் அப்பாவி மக்களே  பலர் மிதியுண்டும் கொம்பால் குத்தப் பட்டும் பரிதாப நிலைக்கு  செல்கின்றார்கள் . என்னுடைய  வேண்டுகோள் இது தான் : போட்டியில் ஈடுபட விரும்புவோர்கள் ஒருவர் பின் ஒருவராக பாது காப்பு வளையத்துக்குள் வந்து தனியாக காளையை , திரைப்படத்தில் எதிர் கொள்வது போல எதிர்க்க  வேண்டும் . அப்போதுதான்  தனிப்பட்டஆண்மகனின் வீரம் ஆராதிக்கப்படும் .


மேலும் விலங்கு நல ஆர்வலர்களுக்கு ஒரு விண்ணப்பம் . காளைகள் , எருதுகள் என்ற பெயரில் காலம் காலமாக உழவனின் தேவைகளுக்கும் , போக்குவரத்திற்கும் பயன் படுத்தப்  பட்டு வந்துள்ளது. ஆனால்  காடுகளில் கம்பீரமாக திரிந்து வனத்தை வளப் படுத்தி வந்த யானைகளை பிடித்து வந்து ஆலயங்களின் முன் நிற்க வைத்து ஐந்துக்கும் பத்துக்கும் காணிக்கை  என்ற பெயரில் பிச்சை எடுக்க வைத்து , இப்போது  நிலத்தில் வாழும் உயிரிலே மிக பெரிய தோற்றத்தை உடைய களிறுகளை காலில்  சங்கலி போட்டு கட்டி வைத்து கால் கடுக்க நிற்க வைத்து விட்டு , ஆண்டிற்கு ஒரு முறை அவைகளை கொண்டு யாகங்கள் நடத்தி புத்துணர்ச்சி முகாம் என்ற பெயரில் ஒரு சிகிச்சை அளிப்பது  நியாயமா ? அவைகளை சுதந்திரமாக காட்டில் நடமாட வைக்க வழி காணுங்கள் . காடுகளின் ஆக்கிரமிப்பில் இறங்கியுள்ள அந்நியாயகாரர்களின் அத்து மீறல்களிலிருந்து  அவைகளுக்கு நல வாழ்வு தாருங்கள் . பல்லுயிர்  தன்மை குறித்து உலகத்திலேயே முதன் முதலில் பேசியவர் வள்ளுவர் தான் . அதிலும்  அவர்  பல  நூல்களை  கற்று ஆய்வு செய்ததில் முதன்மையானதாக சொல்கிறார் .
"பகுத்துண்டு  பல்லுயிர்  ஓம்புதல்  நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "

Friday 8 January 2016

பேராசிரியர் , அறிவியலாளர்,
இலக்கியம் , ஆன்மிகம் ,  தன்னம்பிக்கை  சொற்பொழிவாளர்.
பட்டிமன்ற பேச்சாளர்.

"இறை
பாத கமலங்களை  தொழுவோர்
பாதக மலங்களில் இருந்து எழுவோர் "

தொடர்புக்கு


பா .சக்திவேல் ,

உதவிப் பேராசிரியர் ,

மின்னணு  மற்றும் தகவல் தொடர்புப்  பொறியியல் துறை ,

மௌண்ட்  சீயோன்  பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்  கல்லூரி, 

புதுக்கோட்டை .
தமிழ்நாடு 


மின்னஞ்சல் : sakthi1807@gmail.com

அலை பேசி : +91 9952806070